சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் ஹிந்தி மொழி டியூஷன் நடத்தி வருகிறார். அந்த டியூஷனில் அதே பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர் ஹிந்தி மொழி கற்று வருகின்றனர். இந்நிலையில் டியூஷனில் படிக்கும் 10 மாணவர்களை பெற்றோர் அனுமதியுடன் சண்முகப்பிரியா சுற்றுலா வேனில் ஏற்காட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர்களுடன் 7 குழந்தைகளின் பெற்றோர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வாழவந்தி கிராமத்தை அடுத்த பாலம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவர்ந்து விட்டது. இந்த விபத்தில் லட்சுமி, கோகிலவாணி, கவிதா, பாலாஜி உள்பட 13 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.