திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசாரி புதூரில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் பூக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பாலமுருகன் ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பாலமுருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.