கரூர் மாவட்டத்திலுள்ள சுண்டு குழிப்பட்டியில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் செல்வராஜ் வீட்டிற்கு வந்ததிலிருந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் பெற்ற அவரை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுமதி தனது மகன் இறந்த துக்கம் தாங்காமல் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுமதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதியும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.