ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதியில் இருந்து தனியார் பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ரமேஷ் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிலுக்குபட்டி அருகே சென்றபோது பிரசாந்த் என்பவர் ஓட்டி வந்த கார் பேருந்து மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மணிமேகலை, சந்திரகலா, கோகுலகிருஷ்ணன் உள்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.