அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நவீன ரக மோட்டார் சைக்கிள்களில் சிலர் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.

அதன் அடிப்படையில் நேற்று இரவு திருச்சி-சிதம்பரம் பைபாஸ் சாலையில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.