மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் காலனியில் தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 3-வது மாடியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் மேல் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த அக்ஷயா தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்ஷயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.