மதுரை மாவட்டத்திலுள்ள சிலார்பட்டியில் ராஜேஷ்(35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் சிலார்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தலையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ராஜேஷை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கும் ராஜேஷுக்கும் டாஸ்மாக் பாரில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ராஜேஷை பின் தொடர்ந்து வந்து அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் விஜயகுமாரையும், ரமேஷ் கண்ணாவையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.