திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பஞ்சப்பூர் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு பேர் வீட்டிற்கு நடுவே இருக்கும் இடத்தில் முள்வேலி அமைப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டது.

சம்பவம் நடந்த அன்று முருகேசனும், அவரது மகன் ராஜேஷும் பிரபாகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பிரபாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முருகேசன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.