சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்து பத்தாம் தேதி செந்தில்குமார் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பத்திலிருந்து செந்தில் குமார் கீழே விழுந்ததால் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.