விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.