விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரநேரி நதிக்குடி கிராமத்தில் கோட்டைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை கோட்டைசாமி ஒரு இடத்தில் அடைத்து வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மர்மமான முறையில் 43 குட்டிகள் இறந்து கிடந்ததை கண்டு கோட்டைசாமி அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி அறிந்த அதிகாரிகளும், கால்நடை டாக்டர்களும் சம்பவ இடத்திற்கு சென்று குட்டிகளின் உடலை ஆய்வு செய்தனர். இதனையடுத்து வெளியில் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், போதிய இடவசதி, காற்றோட்டம் இல்லாததாலும் மூச்சு திணறல் ஏற்பட்டு குட்டிகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.