தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் யோகீஸ்வரர் தெருவில் பெற்றோரை இழந்த ஐயப்பன் தனது பாட்டி கோமதியுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்த்தும், மாடு புரோக்கர் வேலையும் பார்த்து வந்துள்ளார். நேற்று காலை ஐயப்பன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கோமதி கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஐயப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.