கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை ராதிகா தினேஷுடன் ஓடிவிட்டார். 3 முறையும் போலீசார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி பாலகிருஷ்ணன் தனது மனைவியை அழைத்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் வீட்டில் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த பாலகிருஷ்ணனை அவரது மனைவி ராதிகா கொலை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் ராதிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.