விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொரிக்குளம் கிராமத்தில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டு மாடியில் மர்மமான முறையில் முனீஸ்வரன் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே விஷ பாட்டிலும் இருந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனீஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் இருளாயி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.