திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வழக்கறிஞரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று செல்வகுமாரின் வீட்டிற்கு முன்பு பெண் தூய்மை பணியாளர் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்வகுமார் அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார்.

மேலும் சாதி பெயரை கூறி அந்த பெண்ணை செல்வகுமார் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.