திண்டுக்கல் மாவட்டத்தில் உசிலம்பட்டி ஆதிதிராவிடர் காலணியில் முத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுப்பம்மாள்(67). நேற்று முன்தினம் வேடசந்தூர்-கோவிலூர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பம்மாள் மீது முதுவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுப்பம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.