திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார்(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சம்பவம் நடைபெற்ற அன்று நவீன்குமார் தனது சகோதரி பிரியாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு ஈசநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நவீன் குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த நவீன்குமார் பின்னால் வந்த தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் பிரியா உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.