கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் சமத்துவபுரத்தில் முபாரக் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜரினா பேகம்(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜரினா பேகம் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற போது அங்கிருந்த குடிநீர் தொட்டியில் கால் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஜரினா பேகத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜரினா பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.