கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொட்டியோடு பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோதண்ட ராவ் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று குளத்திற்கு குளிக்க சென்ற கோதண்டராவ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கோதண்ட ராவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.