சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு ஸ்டாண்டி மருத்துவக் கல்லூரியில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்(24) என்பவர் எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். இவர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில் இருந்த போது திடீரென தனுஷ் மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்ததும் சக மாணவரான ஆதித்யா என்பவர் தனுஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தனுஷ் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.