விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டி குடிசை கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 100 நாள் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற அலமேலு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அலமேலுவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில் ஏமாப்பூர் ஏரியில் அலமேலு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூதாட்டியை யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.