விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணக்கன்பாளையத்தில் விஜயபாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஏமப்பூர் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி விஜயபாஸ்கர் கோவிலில் வைத்து சிறுமியை இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதுகுறித்து அறிந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜம்மாள் விஜயபாஸ்கரின் வீட்டிற்கு சென்று விசாரித்த போது சிறுமிக்கு 16 வயது தான் ஆகிறது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் விஜயபாஸ்கர், அவரது தந்தை, சிறுமியின் தாய், தந்தை ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.