சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் சக்தி என்ற மகனும் இருந்தனர். இதில் சக்தி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான் இந்நிலையில் சக்தி அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் பழக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சக்தி உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.