சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் 25 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். கடந்த மாதம் செல்போன் மூலம் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தான் லண்டனில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு 40 ஆயிரம் பவுண்டுகள் பரிசு விழுந்ததாகவும் தெரிவித்தார். பரிசு தொகை வழங்க பல்வேறு காரணங்களை கூறி மர்ம நபர் வாலிபரிடமிருந்து 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் கூறியபடி வாலிபருக்கு பரிசு தொகையை கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.