கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா என்பவரை ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 20- ஆம் தேதி அம்மா வீட்டிற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு ராஜ்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த ராஜகுமாரியின் தாய் தனது மகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.