திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆர்.எப் சாலையில் தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு துணிக்கடை, ஹோட்டல்கள், வங்கி செயல்படுவதால் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். நேற்று துணிக்கடையில் குளிர்சாதன இயந்திரத்திற்கு கியாஸ் நிரப்புவதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் சென்றனர். இந்நிலையில் சரக்கு வேனில் இருந்து 8 கிலோ எடையுடைய கியாஸ் சிலிண்டரை இறக்கி வணிக வளாகம் முன்பு வைத்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது, குளிர்சாதன எந்திரத்தில் கியாஸ் நிரப்பக்கூடிய சாதாரண சிலிண்டர் இறக்கி வைத்த போது அதிக அழுத்தம் காரணமாக வெடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.