தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட நலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமையில் போலி டாக்டர்கள் ஒழிப்பு குழுவினர் நல்லம்பள்ளி வாணியர் தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது முருகேசன் என்பவர் முறையாக மருத்துவ படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனால் முருகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஊசி, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.