கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்னால்டு(18) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அர்னால்டு தனது நண்பரான சேக்குவாரன்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திட்டக்குடிக்கு வந்துள்ளார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு இருவரும் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். இந்நிலையில் வாகையூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது முன்னால் சென்ற தனியார் பள்ளிக்கூட பேருந்தை முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது எதிரே வந்த கார் வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அர்னால்டும், சேக்குவாரனும் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.