தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜடையம்பட்டி கிராமத்தில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் சென்னையன் தனது மனைவி ஆஷா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த அரூர் போலீசார் சென்னையனை கைது செய்தனர்.

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சென்னையனுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.