திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாகராஜ் என்பவர் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜ் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு வடமதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவிரி குடிநீர் தொட்டி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு நாகராஜ் மாணவர்களை இறக்கி கொண்டிருந்த போது திடீரென வந்த ஒருவர் பேருந்தை இங்கே எப்படி நிறுத்தலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் கோபமடைந்த அந்த நபர் நாகராஜை சரமாரியாக தாக்கி பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை கல்லால் உடைத்துள்ளார். இதுகுறித்து நாகராஜ் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்து டிரைவரை தாக்கி, கண்ணாடியை உடைத்த வடமதுரை தெற்கு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பெரியசாமி(38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.