மதுரை மாவட்டத்திலுள்ள குட்லாடம்பட்டி வடக்கு தெருவில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று பெரிய கருப்பனுக்கு சொந்தமான பசுமாடு மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அங்கு கிடந்த நாட்டு வெடி குண்டை பசு எதிர்பாராதவிதமாக கடித்ததால் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதனால் மாட்டின் வாய் பகுதி பிளந்து ரத்தம் கொட்டியதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.