புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக வரும் அரசு பேருந்துகளில் மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்துவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் படி நேற்று அதிகாலை போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை போலீசார் வழிமறித்து பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது 2 பெண்கள் வைத்திருந்த பையில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அமுதா, பூமாதேவி என்பது தெரியவந்தது. இருவரும் அக்காள், தங்கை. அவர்கள் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக மது பாட்டில்களை கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அமுதா, பூமாதேவி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 108 மது பாட்டில்கள், 30 சாராய பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.