ஆந்திர மாநிலத்தில் விமல் குமார்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விமல் குமார் தனது குடும்பத்தோடு ராமேஸ்வரம் செல்ல முடிவெடுத்தார். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வழியாக ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் பயணம் செய்தனர். இந்நிலையில் ரயில் பண்ருட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பாக்கியலட்சுமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து டிக்கெட் பரிசோதவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரவு 10:30 மணிக்கு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பாக்கியலட்சுமி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாக்கியலட்சுமி ஏற்கனவே இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.