கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பெரிய வடவாடி நடுத்தெருவில் கலைச் செழியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விருதாச்சலம் கடைவீதியில் காபி கடை நடத்தி வரும் ரகுநாதனின் மகன் ஸ்ரீ ராம் என்பவரிடம் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறி 3 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.

இதேபோல பெண்ணாடம் கடைவீதியில் கணினி மையம் நடத்தி வரும் கோவிந்தராஜன் மகன் சண்முகசுந்தரத்திற்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 1/2 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார் ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை மோசடி செய்து விட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கலை செழியனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.