கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 26-ஆம் தேதி சிவசங்கரி வரதராஜபுரம் மேட்டு விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது சிவசங்கரியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சிவசங்கரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.