அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் மெயின் ரோட்டில் மதியழகன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி ராஜேஷ் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த மதியழகன் மற்றும் அவரது மகன் வீட்டிற்கு வெளியே வந்து ஏன் இப்படி பிரச்சனை செய்கிறாய்? எனக் கேட்டுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட தகராறில் ராஜேஷ், அவரது தந்தை கோவிந்தராஜ், தாய் கீதா, தம்பி சந்தோஷ் ஆகிய 4 பேரும் இணைந்து ராணியின் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேஷ், கீதா, சந்தோஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.