கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 8 மணிக்கு சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான செல்வம்(54) என்பவர் வலுக்கட்டாயமாக சிறுமியை கருவேல மரக்காட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்தார். இதுகுறித்து ஆவணங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.