திண்டுக்கல்-கரூர் சாலையில் நந்தவனப்பட்டி அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு ஏற்றி வந்த 3 லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தபோது தகுதி சான்று புதுப்பிக்காமலும், சாலை வரி செலுத்தாமலும் வாகனங்களை இயக்கியது தெரியவந்தது.

இதனால் 3 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல் திண்டுக்கல் நகரில் பழனி சாலை, திருச்சி சாலை ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தி 12 மாணவிகளை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்கள், தகுதி சான்று மற்றும் பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட தனியார் கல்லூரி பேருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.