கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி அம்மாகுளத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீசன் என்ற மகன் இருக்கிறார். இவரது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று ஜெகதீசனின் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெகதீசனை கைது செய்தனர். மேலும் 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.