விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு பகுதியில் விஷ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி எதிரே இருக்கும் ரேஷன் கடை முன்பு விஷ்வா தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது புருஷோத்தமன் என்பவர் எதற்காக இங்கு நின்று பேசி கொண்டிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அப்போது சிறிது நேரம் பேசிவிட்டு இங்கு இருந்து செல்கிறோம் என விஷ்வா கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த புருஷோத்தமன் விஷ்வாவை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புருஷோத்தமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.