புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கணேசனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஒன்றரை லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அந்த அபராத தொகையை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.