கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் ரங்கசாமி(87)-ராமாத்தாள் (80) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவர்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுத்து விட்டோம்.

இந்நிலையில் எங்களது உறவினர் ஒருவரும், அவரது மகனும் இணைந்து கண்ணம்பாளையத்தில் எங்களுக்கு இருக்கும் நிலத்தை அவர்களது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கும் படி அடித்தும், மிரட்டியும் துன்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு தற்போது மீண்டும் மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.