கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு கருப்பராயன்பாளையத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிராமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் அபிராமிக்கு அறிவுரை கூறி கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். ஆனால் அபிராமி உடனடியாக திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

அதற்கு படிப்பு முடியும் வரை திருமணம் வேண்டாம் என பெற்றோர் கூறினர். இதனால் மன உளைச்சலில் இருந்து அபிராமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.