கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயதுடைய இளம் பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவருடன் கோவை-திருச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கணவன், மனைவியை வழிமறித்து அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன், மனைவி இருவரும் அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.