சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த மாதம் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சிறுமியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தைகள் கூறி பப்ஸ் வாங்கி கொடுத்தார்.

இதனையடுத்து சிறுமியை கடையம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே இருக்கும் பிளாட்டுக்கு நைசாக அழைத்துச் சென்று ரவிக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ரவி குமாரை கைது செய்தனர்.