திருச்சி மாவட்டத்தில் உள்ள தெற்கு உக்கடை பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ரிசானா தஸ்ரின் என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சதாம் உசேன் தனது குடும்பத்தினருடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சதாம் உசேனின் குடும்பத்தினர் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தனது மகள் ரிசானா தஸ்ரின் காணாமல் போனதை கண்டு சதாம் உசேன் பதறி தண்ணீரில் தேடினார்.

அப்போதுதான் ரிசானா தஸ்ரின் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரிசானா தஸ்ரினை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.