சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கூறியதை நம்பி ரஞ்சிதா ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பிறகு அந்த நபர் ரஞ்சிதாவை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரஞ்சிதா சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.