சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டியில் மோகனம்மாள்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் இன்ஸ்டாகிராமில் ஒரு டாஸ்கை அனுப்பி, அதை முடித்து தருமாறு கூறினார். இதனையடுத்து குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அந்த நபர் கூறினார்.

இதனை நம்பி மோகனம்மாள் 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். அதன் பிறகு அவர் மோகனம்மாளை தொடர்பு கொள்ளவில்லை. இதுகுறித்து மோகனம்மாள் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.