திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புங்கம்பாடியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் இறந்து விட்டதால் முத்துலட்சுமி தனது 4 வயது மகனுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான மணிகண்டன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில் மணிகண்டன் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டன் அடிக்கடி முத்துலட்சுமியின் மகனை தனியாக அழைத்துச் சென்று சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி மணிகண்டன் சிறுவனுக்கு சூடு வைக்கும் போது அதே பகுதியை சேர்ந்த சிலர் செல்போனின் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.