தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடபாதி பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கணித தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்ற கீர்த்திகா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கீர்த்திகாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. நேற்று முன்தனம் நடந்த அறிவியல் தேர்வு எழுதவும் கீர்த்திகா செல்லவில்லை. இதுகுறித்து ராணி கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கீர்த்திகாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.